ஸ்பெக்ட்ரம் பாக்கியால் திணறும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிம்மதி

நிலுவைத் தொகையை பல தவணைகளாக செலுத்தும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வட்டி இப்போதைய நிலுவைத் தொகை அடிப்படையிலேயே வசூலிக்கப்படும்.


கடந்த அக்டோபர் 24ஆம் தேதி ஏஜிஆர் கணக்கீடு பற்றிய வழக்கில், தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 92 ஆயிரத்து 642 கோடி ரூபாய் நிலுவைத் தொகையைச் செலுத்த உத்தரவிட்டிருக்கிறது.

இந்த உத்தரவால் கடும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்பதால் ஏர்டெல், வோடபோன்-ஐடியா ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசை அணுகி, உத்தரவைத் தளர்த்துமாறு கேட்டுக்கொண்டன. இதன்பேரில், 42 ஆயிரம் கோடி ரூபாய் வரையான நிலுவையைச் செலுத்த 2 ஆண்டுகள் அவகாசம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.


புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


இதனால், வோடபோன்-ஐடியா நிறுவனம் 23 ஆயிரத்து 920 கோடி ரூபாயையும் ஏர்டெல் 11 ஆயிரத்து 746 கோடி ரூபாயையும் ரிலையன்ஸ் ஜியோ 6 ஆயிரத்து 670 கோடி ரூபாயையும் செலுத்த 2 ஆண்டுகள் கிடைத்துள்ளது.


Popular posts
மூன்றாவது நாளாக முன்னேற்றம் சென்செக்ஸ் 353 புள்ளிகள் உயர்வு - நிப்டி 110 புள்ளிகள் அதிகரிப்பு
வாணியம்பாடியில் கொரோனா பரவுவதை தடுக்க முழு தடை செய்யப்பட பகுதியாக அறிவித்துள்ளதால் கடும் பாதிப்பு. வங்கிகள் இயங்காததால் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் இருந்தும் ஏ.டி.எம்களில் பணம் நிரப்பததால் பணம் எடுக்கமுடியவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு
Image
மூன்றாவது நாளாக முன்னேற்றம் சென்செக்ஸ் 353 புள்ளிகள் உயர்வு - நிப்டி 110 புள்ளிகள் அதிகரிப்பு
திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்
Image
செல்லம்பட்டி பஞ்சாயத்தில் கொரோனா எதிரொலி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றி தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
Image